நெவில் வன்னியாராச்சியை விளக்கமறியலில்

Date:

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். 

28 மில்லியன் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம் குறித்து வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஓய்வுபெற்ற இராணுவ கேணலான நெவில் வன்னியாராச்சி, வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையான போதே  கைது செய்யப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில்...

700 கிலோ போதை பொருள் படகின் உரிமையாளர் கைது

தங்காலை, சீனிமோதர பகுதியில் 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பது உறுதி

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கம்பெனிளுக்கு காலக்கேடு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை...