கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்பில் சிக்கல்!

Date:

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

காவிந்த ஜயவர்தன தகவல் வெளியிடும் வரை அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அங்கு இருந்த பாதுகாப்பு பதில் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கர்தினாலின் பாதுகாப்பு குறித்து உடனடியாக ஆராயப்படும் எனவும், அவருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தயங்காது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கர்தினாலின் பாதுகாப்பு குறித்து இன்றே ஆராயப்படும் எனவும் பிரமித பண்டார தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒரு வாரத்தில் 500 லட்சம் பணம் தேடுவேன் – லால்

புதிய சொகுசு வீடு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட சர்ச்சைக்கு...

மோசடி தொடர்பில் LNW வாசகர்களுக்கு எச்சரிக்கை!

அன்புடைய வாசகர்களே, இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா?...

தங்கம் விலை நிலவரம்

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (04) காலை தங்கத்தின் விலை நேற்றைய...

பிரமாண்ட சொகுசு வீடு! விசாரணை செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு!!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல,...