போர்ட் சிட்டியில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள சீனக் குழு

Date:

கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர்.

C.Z.K. Huarui Cultural and Art Company என்ற பீஜிங்கை தலைமையகமாக கொண்ட அரசுசார் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் குழுவே இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர்.

குறித்த குழுவில் நிறுவனத்தின் பொது முகாமையாளர் உட்பட மேலும் 03 பேர் வருகைத்தந்துள்ளனர்.

50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இவர்கள் முன்னெடுக்க உள்ளனர்.

மேலும், இந்த முதலீட்டாளர்கள் குழு இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதுடன், இந்த முதலீட்டில் மின்சார வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...