போர்ட் சிட்டியில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள சீனக் குழு

Date:

கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர்.

C.Z.K. Huarui Cultural and Art Company என்ற பீஜிங்கை தலைமையகமாக கொண்ட அரசுசார் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் குழுவே இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர்.

குறித்த குழுவில் நிறுவனத்தின் பொது முகாமையாளர் உட்பட மேலும் 03 பேர் வருகைத்தந்துள்ளனர்.

50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இவர்கள் முன்னெடுக்க உள்ளனர்.

மேலும், இந்த முதலீட்டாளர்கள் குழு இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதுடன், இந்த முதலீட்டில் மின்சார வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...