வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை உயர்வு

Date:

ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்கள் இதுவரை 10% அதிகரித்துள்ளதாக பணியகம் கூறுகிறது.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலைக்காகச் சென்றதாகவும், 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை 25,716 ஆகவும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...