எதிர்வரும் சில தினங்களுக்குள் கொழும்பில் உள்ள பிரதான விகாரைகள் மீது தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என்ற தகவல் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்று (05) அறிவித்துள்ளது.
சிறைக் கைதி ஒருவரால் சிறைச்சாலை பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட பேப்பர் துண்டு ஒன்றின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
அதனை பரிசீலித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முறையான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவானின் உத்தரவுக்கமைய மேலதிக அறிக்கையை சமர்ப்பித்து இதனைத் தெரிவித்துள்ளனர்.