இந்தியாவின் சிக்கிமில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு; 19 பேர் பலி

Date:

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் அவ்வப்போது இயற்கை பேரிடரில் சிக்கித் தவித்து வருகிறது.

அந்த வகையில் வடக்கு சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழை மற்றும் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையை நிலை குலையச் செய்துள்ளது.

முழுவதுமாக நிரம்பிய சுங்தாங் அணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதும் ஆற்றில் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்தது.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 4 ராணுவ வீரர்களும் அடக்கம், இதோடு 102 பேரை காணவில்லை.

மேலும் வெள்ளத்தில் இருந்து 2,011 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் வேகமாக பாய்ந்தோடியதால் காணாமல் போனவர்களை ஆற்றின் தாழ்வான பகுதிகளில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள 26 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...