Thursday, May 2, 2024

Latest Posts

ஹம்பாந்தோட்டையில் ராஜபக்ஷக்களை ஆட்டம் காண வைத்த சஜித் அணி!

பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இங்கு 483 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 335 பேர் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.

இதன்படி, சஜித் அணி முன்வைத்த ஒன்பது வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளதுடன், மொட்டு கட்சி முன்வைத்த ஒன்பது வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

இதன்படி, வரலாற்றில் முதன்முறையாக ராஜபக்சக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு எந்த வேட்பாளரும் வெற்றிபெற முடியாத நிலையை எட்டியுள்ளது.

நாடு தழுவிய கூட்டுறவுத் தேர்தல்களில் பெரும்பாலானவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றி பெற்றுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.