தீவகக் கடற்றொழில் அமைப்புக்களை புங்குடுதீவில் சந்தித்த கனேடியத் தூதர்

Date:

“கடல் கடந்த தீவுகளில் சுமார் 1,500 மீனவர்கள். ஆனால், ஒரு எரிபொருள் நிலையம்கூட இல்லாதமை மீனவர்களின் பெரும் பிரச்சினையாகக்  காணப்படுகின்றது.” – என்று கனேடியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ் யாழ்ப்பாணம், தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவகப் பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ். புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமூக நிலைய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்ச்சன் பிகிராடொ, தீவகப் பெண்கள் வலையமைப்பினர், தீவகப் பகுதி கடற்றொழில் அமைப்புக்களின் நெடுந்தீவு சமாசத் தலைவர் யூலியான் குரூஸ், நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு பிரதேச மீனவப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த மூவர் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ – இந்திய துணை ஜனாதிபதி உறுதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய...