”ஈஸ்டர் தாக்குதல்”இரு அறிக்கைகளையும்திங்கள் வெளியிடுவேன்

Date:

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவேன்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அவற்றைப் பகிரங்கப்படுத்துவதற்கு அரசுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளேன்.

இந்தக் காலப்பகுதிக்குள் அறிவிக்கை வெளியிடப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு வழங்கினால் என்னிடம் உள்ள அறிக்கைகளை அரசிடம் கையளிப்பேன். அவ்வாறு இல்லாவிட்டால் நான் கூறியதுபோன்று எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கைகளை வெளியிடுவேன்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...