Tuesday, April 30, 2024

Latest Posts

கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீச வேண்டாம் – முருந்தெட்டுவே

ஜீப் விற்பனை தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர தமக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் அவற்றை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அவர் கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீசுவதாகவும் அவர் கொடுத்த கடிதங்கள், காசோலை எண்கள் கூட தன்னிடம் இருப்பதாகவும் தேரர் கூறினார்.

தாம் வியாபாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் வியாபாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மக்களை தவறாக வழிநடத்தி பொய் பேச வேண்டாம் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பாராளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.