தேர்தல் முறை மறுசீரமைப்புக்கு முன்மொழிவுகளை வழங்க ஒன்பது பேர் கொண்ட குழு; வெளியானது வர்த்தானி

Date:

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் முறை மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவை நியமித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள விசேட யோசனையொன்றை நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்ததுடன், இந்த யோசனை தொடர்பிலான விடயங்களை ஆராய விசேட குழுவொன்றை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல்முறை மறுசீரமைப்பு தொடர்பில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இதற்காக அமைக்கப்படும் எந்தவொரு குழுவிலும் பங்குபற்ற மாட்டோம் எனவுட் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...