கிழக்கில் புத்தர் சிலையை அமைப்பது பௌத்த மேலாதீக்கத்தின் வெளிப்பாடு

Date:

ஜனாதிபதியின் ஆணையினை மீறி கிழக்கில் முன்னாள் ஆளுநர் தலைமையில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை பௌத்த மேலாதிக்க நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியின் பேச்சை மீறி செயற்படும் தலைமைகளும், மக்களுமே கிழக்கில் உள்ளனர். எனவே ஜனாதிபதியின் பேச்சை மீறிய செயற்பாடுகளே அங்கு இடம்பெறுகின்றன.

தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்த போதிலும்கூட கிழக்கில் முன்னாள் ஆளுநர் தலைமையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தவேளை மயிலத்தமடுவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினேன்.

மட்டுவில் தமிழ் மக்களின் கால்நடைகளை அழித்து, இடங்களை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்குகின்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றன.

இம்மக்களின் காணிகளை விடுவிக்குமாறும், அக்காணிகளை மீளவும் அம்மக்களிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மாத்திரமல்லாமல், அங்கு தமிழ் மக்கள் போக முடியாதவாறு அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன.

தற்போது கிழக்கில் திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன” எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...