பிறந்து 45 நாட்களேயான குழந்தை திடீர் உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.

கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 16 ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டது. அதையடுத்து குழந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் பெற்றோர் கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...