பிறந்து 45 நாட்களேயான குழந்தை திடீர் உயிரிழப்பு

0
229

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.

கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 16 ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டது. அதையடுத்து குழந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் பெற்றோர் கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here