ஜனாதிபதி ரணில் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே சந்திப்பு

Date:


சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு பெய்ஜிங்கில் இன்று காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவில் இடம்பெற்றுவரும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மூன்றாவது Belt and Road மாநாட்டில் பங்கேற்றப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 15 ஆம் திகதி இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.

இதன்படி, ஜனாதிபதியின் சீன விஜயம் இன்றுடன் நிறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீன துணைப்பிரதமர் Ding Xuexiang, சீன நிதி அமைச்சர் Liu Kun மற்றும் ஜனாதிபதி இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இலங்கை – சீனா இடையிலான பல்வேறு துறைசார் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...