இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலக நாடுகள் இலங்கைமீது போர்க்குற்றங்களை சுமத்த முடியாது

Date:

வன்னியில் நடைபெற்ற போருடன் காஸா போரை ஒப்பிடுவது தவறு. இன்று ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கை போரில் புலிகள் பக்கமே நின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இஸ்ரேல் – பலஸ்தீன போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்

“இலங்கை 2 ஆயிரத்து 500 ஆண்டுகளாக ஒற்றாட்சி நாடாகவே இருந்துவருகின்றது. இதற்காக எமது முதாதையர்கள் உயிர் தியாகம்கூட செய்துள்ளனர்.

எமது நாட்டை இரண்டாக்குவதற்காகவே புலிகள் போரிட்டனர். அந்த போரை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். ஹமாஸ் அமைப்பின் நோக்கம் வேறு, பலிகளின் நோக்கம் வேறு. எனவே , காஸா போருடன் இலங்கை போரை ஒப்பிடமுடியாது.

ஹமாஸ் அமைப்பை பயங்கரவாதிகள் எனக் கூறி காஸா யுத்தத்தில் இன்று இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலக நாடுகள் அன்று ஈழப்போரில் புலிகளுக்காக முன்நின்றன. பிரபாகரனை காப்பாற்றிக்கொள்வதற்காக அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முயற்சித்தன.

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் வந்தார். சமாதான உடன்படிக்கைக்கு முன்மொழிவு செய்யப்பட்டது. அதற்கு இணங்கி இருந்தால் இலங்கையில் இன்றும் குண்டுகள் வெடித்துகொண்டுதான் இருந்திருக்கும்.

ஆனால் காஸாவில் போர் நிறுத்தத்துக்கு மேற்குலகம் விரும்பவில்லை. ஐநாவில் அந்த யோசனையை ஏற்கவில்லை. இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலகமே இலங்கைமீது போர்க்குற்றங்களை சுமத்திவருகின்றன.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...