யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 2 பேர் கைது

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்துக்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்த இருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...