பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் – விஜித ஹேரத்

Date:

புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதா என்பது குறித்து அரசாங்கம் இறுதி தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது ஆராயவில்லை அது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் திருத்தங்களை முன்மொழிந்து அவற்றை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்து பல காலமாக உள்ளது புதிய நாடாளுமன்றத்தின் அமர்வுகள் ஆரம்பமான பின்னரே இது குறித்து தீர்மானிப்போம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...