ரணில் தொடர்பில் உயர்நீதிமன்றின் உத்தரவு!

Date:

அதிபராக நியமித்தமை தொடர்பில் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (29) அனுமதி வழங்கியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதி பதவியில் இல்லாததால் அவரை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர. நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதியாக ரணில் விக்ரமசிங்கவை பெயரிடுமாறு பிரிதி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரணானது என கூறி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

அத்துடன், ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறினார்களா என்பதைக் கண்டறியவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து விலகியதால், அவரின் விலக்கு காலம் முடிவடைந்துள்ளதாகவும், அதற்கமைய, அவரின் பெயரை பிரதிவாதியாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...