ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இருப்பதாக கூறும் அமைச்சர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களை பயன்படுத்தி இதற்கான விலைமனு அழைப்பு பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.