பதுளை பஸ் விபத்தில் 3 மாணவிகள் மரணம்!

Date:

  • 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்

பதுளை, மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும், 35 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காயமடைந்தவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மஹியங்கனைப் பக்கமாக சுற்றுலா சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும்போது பஸ்ஸில் 36 மாணவர்களும், 2 விரிவுரையாளர்களும், 2 இராணுவ அதிகாரிகளும். சாரதியும் என 41 பேர் இருந்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்த 35 பேர் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....

யூரியா உரத்தின் கையிருப்பு குறைவு

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் யூரியா...