பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்த சிறுமியை கொடூரமாக தாக்கிய ஆசிரியரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆசிரியர் தனது மகளை தொடர்ச்சியாக தாக்கியதாக சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நேற்று (10) அவரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான சிறுமி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.