அரசியல் நோக்கத்திற்கு ஆதாரம் இன்றி கிரிக்கெட் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைப்பு

0
75

பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் அரசியல் இலாபங்களுக்காக சாட்சியமில்லாமல் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நியாயமானதல்ல என ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்பாக எத்தனையோ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கிறோம்.

பாராளுமன்றத்தின் சிறப்புரிமையின் கீழ் உள்ள ஒருவர் அரசியல் ஆதாயத்திற்காக நியாயம் அல்லது ஆதாரம் இல்லாத முற்றிலும் பக்கச்சார்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் என்ன நடக்கும்.

இது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here