நாடாளுமன்றத் தேர்தல் 2024 : எவ்வளவு வீதம் வாக்குப் பதிவானது?

Date:

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் அமைதியான வாக்குப் பதிவுகள் இடபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

கொழும்பில் 65 சதவீத வாக்குப் பதிவும், நுவரெலியாவில் 68 சதவீத வாக்குப் பதிவும் புத்தளத்தில் 56 சதவீத வாக்குப் பதிவும் மாத்தறையில் 64 சதவீத வாக்குப் பதிவும் பதுளையில் 67 சதவீத வாக்குப் பதிவும் மட்டக்களப்பில் 61 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளன.

அநுராதபுரத்தில் 65 சத வீத வாக்குப் பதிவும் குருணாகலில் 64 சதவீத வாக்குப் பதிவும் இரத்தினபுரியில் 65 சத வீத வாக்குப் பதிவும் கேகாலையில் 64 சத வாக்குப் பதிவும் பொலன்னறுவையில் 65 சதவீத வாக்குப் பதிவும் வன்னியில் 65 சதவீத வாக்குப் பதிவும் ஹம்பாந்தோட்டையில் 60 சதவீத வாக்குப் பதிவும் காலியில் 64 சதவீத வாக்குப் பதிவும் திருகோணலையில் 67 சதவீத வாக்குப் பதிவும் மொனராகலையில் 61 சதவீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.

என்றாலும், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 75 வீதமான வாக்களிப்பு பதிவானதுடன், இம்முறை அதனையுடம் மிகவும் குறைவாகவே மொத்த வாக்குப் பதிவு இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் அறிய முடிகிறது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...