கோப் குழு மீது சந்தேகம் நிலவுகிறது; ரொஷான் ரணசிங்க

Date:

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் தனியான பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

கோப் குழுவிற்கு பதிலாக புதிதாக நியமிக்கப்படும் அந்த குழுவே ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர், நேற்றைய தினம் கிரிக்கெட் அதிகாரிகளை கோப் குழு முன்னிலையில் அழைத்த போது, ​​தேவையான கேள்விகளுக்கு பதிலாக, தேவையற்ற விடயங்களையே கோப் உறுப்பினர்கள் வினவியதாக குறிப்பிட்டார்.

“கோப் குழுவும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விற்கப்பட்டதா? என தனக்கு சந்தேகம் நிலவுதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...