கோப் குழு மீது சந்தேகம் நிலவுகிறது; ரொஷான் ரணசிங்க

Date:

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் தனியான பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

கோப் குழுவிற்கு பதிலாக புதிதாக நியமிக்கப்படும் அந்த குழுவே ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர், நேற்றைய தினம் கிரிக்கெட் அதிகாரிகளை கோப் குழு முன்னிலையில் அழைத்த போது, ​​தேவையான கேள்விகளுக்கு பதிலாக, தேவையற்ற விடயங்களையே கோப் உறுப்பினர்கள் வினவியதாக குறிப்பிட்டார்.

“கோப் குழுவும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விற்கப்பட்டதா? என தனக்கு சந்தேகம் நிலவுதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி

இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக...

திருமாவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும்...

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில்...

தென்மேற்கு பருவமழை தொடக்கம்

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...