Friday, May 17, 2024

Latest Posts

இலங்கை வங்கியின் தலைமை பதவிக்கு ரசல் பொன்சேகா நியமிப்பு

ரசல் பொன்சேகா அவர்கள் 2023 ஜனவரி 13 ஆம் திகதி,  நாட்டின் முன்னணி வங்கியான இலங்கை வங்கியின் (BOC) அடுத்த பொது முகாமையாளர்/தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க உள்ளார்.

1990 இல் இலங்கை வங்கியில் இணைந்து, 33 வருட வெற்றிகரமான சேவையை நிறைவு செய்த அவர், தற்போது இலங்கை வங்கியின் மேலதிக பொது முகாமையாளராகவும், பிரதம நிதி அதிகாரியாகவும் கடமையாற்றுகின்றார்.

தற்போதைய பொது மேலாளர்/தலைமை நிர்வாக அதிகாரி கே. இ. டி. சுமணசிறி விரைவில் ஓய்வுபெறவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரசல் பொன்சேகா இலங்கை வங்கித் துறையில் பல தசாப்தங்களாக அனுபவமுள்ள ஒரு தொழில்முறை வங்கியாளர் ஆவார். அவர் இலங்கை வங்கியில் பல்வேறு துறைகளை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.  பொன்சேகா இதற்கு முன்னர் இலங்கை வங்கியின் பிரதம நிதி அதிகாரி மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், சர்வதேச, திறைசேரி மற்றும் முதலீடுகள், கிளை வங்கி மற்றும் கூட்டுத்தாபன மற்றும் கடல்சார் பிரிவுகளின் பிரதிப் பொது முகாமையாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அண்மைக்கால உலக நிச்சயமற்ற நிலையில் இலங்கையின் முன்னணி வங்கியை வழிநடத்தும் கடினமான பணியை வெற்றிகரமாக எதிர்கொண்ட பொன்சேகா, அந்த அனுபவத்துடன் இலங்கை வங்கியை வங்கித்துறையின் புதிய பரிமாணங்களுக்கு கொண்டு வரவுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.