‘கிரிக்கெட் வீரர்களுக்கு தவறான ஊசி ஏற்றப்பட்டுள்ளது’ – தயாசிறி ஜயசேகர

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் தான், இலங்கை அணியின் வீரர்கள் உபாதைக்கு

உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் கருத்து வெளியிட்டிருந்தார்.

வைத்தியரால் செலுத்தப்பட்ட ஊசிகளினால் வீரர்களின் பாதங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

குறித்த அந்த வைத்தியர் தொழில்முறை விளையாட்டு வைத்தியர் அல்ல என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் வெளிப்படுத்தினார்.

இதன்போது வீண் செலவு செய்வதை நிறுத்துமாறும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்வதில் வெளிப்படைத் தன்மையைப் பேணுமாறும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு கோப் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதேநேரம், மேலும் 3 நாட்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை அழைக்கவும் கோப் குழு தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...