இன்று நண்பகல் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

Date:

இன்று (20) நண்பகல் 12 மணியளவில் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக இந்த நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய கோப் குழுவை தொடர்வதா அல்லது கலைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களை நியமிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...