1. இலங்கையின் அபிவிருத்தியைத் தடுப்பதற்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகள் நீண்ட காலமாக நடந்து வருவதாகவும் கூறுகிறார். இந்த சதிகளால் பொருளாதாரம் பல சந்தர்ப்பங்களில் பாதிக்கபட்டதாக கூறுகிறார். நல்லாட்சி அரசாங்கம் தனது பதவிக்காலத்தில் பாரியளவிலான அந்நிய செலாவணி கடனை எடுத்ததாக குற்றம் சாட்டுகிறார்.
2. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதாரத்தை சுருக்கிக் கொண்டிருப்பதாக NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார். மக்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளது என்று புலம்புகிறார். பொருளாதார நெருக்கடிக்கு காரணம் பொருளாதாரத்தை சுருங்கச் செய்வதே என்று குற்றம் சாட்டினார்.
3. சாதாரண உடை அணிந்து பாடசாலைகளுக்குச் சென்ற ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை பதில் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கலாசாரம், ஒழுக்கம் மற்றும் பாடசாலை அமைப்பின் இருப்பை மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறார்.
4. அரசியலமைப்பின் 21வது திருத்தம் ஒரு “கண்துடைப்பு” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வாக்குறுதியளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதியின் எந்த அதிகாரத்தையும் பறிக்கவில்லை என்று வலியுறுத்துகிறார்.
5. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால், கடந்த 6 மாதங்களாக ஆளுநர் வீரசிங்கவின் கீழ் ரூபாய் “நிலைப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறுகிறார், தனது சொந்த பதவிக் காலத்தில் செய்யப்பட்டதைப் போலவே: ரூபாயை இப்போது மிகக் குறைந்த விகிதத்தில் “நிலைப்படுத்த” வலியுறுத்துகிறார். மேலும் மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை உடனடியாக குறைக்க வேண்டும் என கூறினார்.
6. குழந்தைகளின் போசாக்கின்மையை வெளிப்படுத்திய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவவின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணையம் சுகாதாரச் செயலாளரிடம் அறிக்கை கோருகிறது.
7. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் செல்லும் நபர்களை உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதை இலங்கை நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
8. வரவு செலவுத் திட்டம் 2023 இன் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 121 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 84 பேர் வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் வருகை தரவில்லை.
9. நாட்டில் தற்போது 152 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இந்திய அரசு மற்றும் ADB வழங்கும் கடன் வசதிகள் மூலம் மருந்துகளை வாங்குவதில் நீண்ட செயல்முறை பின்பற்றப்படுவதால் தாமதம் ஏற்படுகிறது என்று கூறுகிறது.
10. SLPP இன் “சுயேட்சை” எம்பி பேராசிரியர் ஜி எல் பீரிஸ், தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா என்று கேட்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் திட்டமிட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.