Saturday, July 27, 2024

Latest Posts

நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டாவுக்கு அழைப்பாணை

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான முருது பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.