வேட்பாளர்கள் பண முதலைகளின் கைப்பாவையாக மாறுகின்ற தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசார வாக்கு முறையை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையை நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்த அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வருடத்திற்கு மூன்று தடவைகள் வாக்காளர் பதிவேடு திருத்தத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதற்கேற்ப, எந்த வாக்களிப்பைப் பற்றி பேசப்பட்டாலும், சமீபத்திய வாக்காளர் பதிவேடுகள் செல்லுபடியாகும் என்றும் அது மிகவும் முக்கியமானது என்றும் பிரதமர் குறிப்பிடுகிறார்.
நேற்று (23) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.