பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

Date:

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பண்டிகைக் காலங்களில் காலாவதியான மற்றும் மாற்றப்பட்ட தகவல்களுடன் பல பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் விசேட அவதானத்துடன் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, ஆடைகள், மின்சாதனங்கள் மற்றும் இதர பொருட்களும் அதிக தேவையுடன் விற்பனை செய்யப்படுவதால், இது தொடர்பாகவும் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்பினால் 1977 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...