பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று பதவி விலகவுள்ளார்.
60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவருக்கு 3 பணி நீட்டிப்புகள் கிடைத்துள்ளன.
பொலிஸ் தலைமையக வட்டாரங்களின்படி, விக்கிரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.