18-20 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு வருட கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்கள் பலவீனமானவர்களாகவும், சக்தியற்றவர்களாகவும் மாறிவிட்ட நிலையில், பாடசாலை கல்வியை வழங்குவதுடன், ஆயுதப் படைப் பயிற்சிக்கும் அவர்களை நிச்சயமாக வழிநடத்த வேண்டும் என்று தேரர் கூறினார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.