மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

0
235

மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால் பாலத்தின் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பாலம் மேலும் சேதமடையாத வகையில்  பாலத்தின் இரு புறங்களிலும் தற்போது மண் மூடைகள் அணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் பாலம் புனரமைக்கப்பட்ட பின்னர் கனரக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று யாழ். மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here