துறைமுக பொது ஊழியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சம்பளம் முறையாக உயர்த்தப்படவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் துறைமுக ஊழியர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்படவிருந்த சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக துறைமுக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நேற்று (29ம் திகதி) அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் துறைமுக தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...