Saturday, July 27, 2024

Latest Posts

துறைமுக பொது ஊழியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சம்பளம் முறையாக உயர்த்தப்படவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் துறைமுக ஊழியர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்படவிருந்த சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக துறைமுக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நேற்று (29ம் திகதி) அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் துறைமுக தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.