சகல மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு!

Date:

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ஆம் ஆண்டுக்கான கல்வித் துறைக்காக 55 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கு அத்தியாவசியமான பாடப்புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவுகள், காலணிகள் என்பன வழங்குவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

புதிய பாடசாலை தவணை 2024 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும் சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், 2030ஆம் ஆண்டுக்குள் சகல சிறார்களுக்கும் இலவச மதிய உணவு வழங்குவதே தமது இலக்கு எனத் தெரிவித்த கல்வி அமைச்சர், அதற்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெற்றுக் கொள்வதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....