அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட குழு சஜித் அணியுடன் சந்திப்பு

Date:

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ உள்ளிட்ட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, திறைசேரியின் உதவி செயலாளர் ரொபர்ட் காப்ரோத், ஐக்கிய அமெரிக்காவுக்க குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி ஜூலி சாங் உள்ளிட்ட குழுவினருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (6) கொழும்பில் இடம்பெற்றது.

சமகால இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு கவனம் செலுத்தினர்.

USAID நிறுவனத்தின் ஆசியப் பணியகத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், விர்சா பெர்கின்ஸ் (டொனால்ட் லூவின் பணிக்குழாம் பிரதானி), USAID நிறுவனத்தின் இலங்கை பணியகத்தின் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் Gabriel Grau,
USAID இலங்கைப் பணியகத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான Asta Zinbo, தென் ஆசியாவிற்கான திறைசேரியின் செயலாளர் ஜெரோட் மேசன் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் விவகார விசேட நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், அஜித் பீ பெரேரா, முஜிபுர் ரஹுமான், காவிந்த ஜயவர்த்தன் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...