மீண்டும் ஒரு கோட்டா நாட்டுக்கு தேவை இல்லை – அஜித்

Date:

நாட்டு மக்கள் படும் துன்பங்களை ஊடாக அதிகாரத்தைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையோ அல்ல, நாட்டை உருவாக்கி அதிகாரத்தைப் பெறுவதே கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 5 வருடங்கள் அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்காத ஒருவரால் நாட்டை ஆள முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு கோட்டாபய பிறப்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மக்கள் இயக்கம் என்றும் அது பணம் சம்பாதிக்கும் இயக்கம் அல்ல என்றும் சஜித் பிரேமதாச நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பது நடவடிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...