மீண்டும் ஒரு கோட்டா நாட்டுக்கு தேவை இல்லை – அஜித்

Date:

நாட்டு மக்கள் படும் துன்பங்களை ஊடாக அதிகாரத்தைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையோ அல்ல, நாட்டை உருவாக்கி அதிகாரத்தைப் பெறுவதே கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 5 வருடங்கள் அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்காத ஒருவரால் நாட்டை ஆள முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு கோட்டாபய பிறப்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மக்கள் இயக்கம் என்றும் அது பணம் சம்பாதிக்கும் இயக்கம் அல்ல என்றும் சஜித் பிரேமதாச நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பது நடவடிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...