மீண்டும் ஒரு கோட்டா நாட்டுக்கு தேவை இல்லை – அஜித்

Date:

நாட்டு மக்கள் படும் துன்பங்களை ஊடாக அதிகாரத்தைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையோ அல்ல, நாட்டை உருவாக்கி அதிகாரத்தைப் பெறுவதே கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 5 வருடங்கள் அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்காத ஒருவரால் நாட்டை ஆள முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு கோட்டாபய பிறப்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மக்கள் இயக்கம் என்றும் அது பணம் சம்பாதிக்கும் இயக்கம் அல்ல என்றும் சஜித் பிரேமதாச நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பது நடவடிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...