மீண்டும் ஒரு கோட்டா நாட்டுக்கு தேவை இல்லை – அஜித்

Date:

நாட்டு மக்கள் படும் துன்பங்களை ஊடாக அதிகாரத்தைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையோ அல்ல, நாட்டை உருவாக்கி அதிகாரத்தைப் பெறுவதே கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 5 வருடங்கள் அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்காத ஒருவரால் நாட்டை ஆள முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு கோட்டாபய பிறப்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மக்கள் இயக்கம் என்றும் அது பணம் சம்பாதிக்கும் இயக்கம் அல்ல என்றும் சஜித் பிரேமதாச நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பது நடவடிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...