மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை – மின்சார சபை

Date:

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது.

அதற்கமைய, தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு தொடர்சியாக பேணுவதற்கு, குறித்த முன்மொழிவில் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சாரக் கட்டண திருத்தத்தை எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை விடுத்த கோரிக்கைக் கடிதத்திற்கு அமைய , 2 வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்குமாறு, ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தவறும்பட்சத்தில் மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்திலிருந்து மின்சார பயன்பாட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமென, ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...