வார விடுமுறை நாட்களில் மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் அதிகளவான யாத்ரீகர்கள் ஸ்ரீ பாதஸ்தானத்தை தரிசிக்க செல்கின்றனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகையிரதங்களில் அதிகளவான பக்தர்கள் செல்கின்றனர்.
பதுளையில் இருந்து செல்லும் புகையிரததில் 90 சதவீதமானவர்கள் சிவனொளிபாதமலை செல்லும் பக்தர்களாக உள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஹட்டன் புகையிரத நிலையத்துக்கு ரயிலில் வரும் பக்தர்கள் சிவனொளிபாதமலை தரிசனத்துக்கே கடந்த சில நாட்களாக வருகின்றனர். இவர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
N.S