யாழில் ஊடகவியலாளரின்வீடு புகுந்து மிரட்டிய கும்பல்- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Date:

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்குக் கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு நேற்று மாலை, ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய கும்பல், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னைத் தாக்க முற்றப்பட்டபோது, அயலவர்கள் கூடியமையால் தாக்குதல் முயற்சியை கைவிட்டு, மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றது என்று பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியாகி இருந்த நிலையில், அதனை அகற்றக் கோரியே அந்தக் கும்பல் மிரட்டியது என்று பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...