செவ்வாயன்று புதிய சபாநாயகர் தெரிவு – மூன்று பேரின் பெயர்கள் முன்மொழிவு!

Date:

சபாநாயகர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்றுமுன்தினம் அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.

புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ள சபாநாயகர் தொடர்பில் சர்ச்சை எழுந்தால் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்று அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதிச் சபாநாயகர் றிஸ்வி சாலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பதி, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், இன்று அல்லது நாளை இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...