நாடு முழுவதும் போலி தராசுகள்!

Date:

இலங்கையில் எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் பல தராசுகள் சரியான தரத்தில் இல்லை என குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மாவட்ட செயலாளர்களின் எடை மற்றும் அளவீடு பிரிவில் ஒவ்வொரு தராசும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றாலும், இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தராசுகள் அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றார்.

தராசை பயன்படுத்தி வர்த்தகர்கள் மேற்கொள்ளும் மோசடிகளை தடுக்க எடை அளவீடு திணைக்களத்துடன் இணைந்து செயற்திட்டமொன்றை உடனடியாக அமைக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பல வியாபாரிகள் விவசாயிகளின் பயிர்களை தொங்கும் வில் தராசில் வைத்து எடைபோடுவதாகவும், அதில் பெரும்பாலான தராசுகள் சரியான தரத்தில் இல்லாததால் விவசாயிகளுக்கு வரவேண்டிய வருமானத்தில் பெரும் தொகையை வியாபாரிகள் மோசடி செய்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...