நாடு முழுவதும் போலி தராசுகள்!

Date:

இலங்கையில் எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் பல தராசுகள் சரியான தரத்தில் இல்லை என குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மாவட்ட செயலாளர்களின் எடை மற்றும் அளவீடு பிரிவில் ஒவ்வொரு தராசும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றாலும், இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தராசுகள் அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றார்.

தராசை பயன்படுத்தி வர்த்தகர்கள் மேற்கொள்ளும் மோசடிகளை தடுக்க எடை அளவீடு திணைக்களத்துடன் இணைந்து செயற்திட்டமொன்றை உடனடியாக அமைக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பல வியாபாரிகள் விவசாயிகளின் பயிர்களை தொங்கும் வில் தராசில் வைத்து எடைபோடுவதாகவும், அதில் பெரும்பாலான தராசுகள் சரியான தரத்தில் இல்லாததால் விவசாயிகளுக்கு வரவேண்டிய வருமானத்தில் பெரும் தொகையை வியாபாரிகள் மோசடி செய்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...