மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர

Date:

இந்தியாவுக்கு அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி என அழைக்கப்படும் புத்தகயாவில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

1,500 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக மகாபோதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வழிபாட்டில் ஈடுபட கயா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பீகார் அமைச்சர்களான பிரேம் குமார், சந்தோஷ் குமார் சுமன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கயா மாவட்ட நீதவான் எஸ்.எம்.தியாகராஜன் , மகாபோதி ஆலய நிர்வாகக் குழுவின் செயலாளர் மஹாஸ்வேதா மஹாரதி மற்றும் பலருடன் இணைந்தே வழிபாட்டில் ஈடுபட்டார்.

புத்தர் தனது முதல் வாரத்தைக் கழித்த போதி மரத்தின் நேரடி வழித்தோன்றலாகக் கருதப்படும் புனித போதி மரத்தின் கீழ் அவர் பூக்களை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி மகாபோதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...