முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

Date:

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய ஆயுதப்படை உறுப்பினர்கள் அனைவரும் அடுத்த வாரம் முதல் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 11 மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது பொதுப் பணத்தை வீணடிக்கும் செயற்பாடு எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்த முடிவுகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்த பிறகு எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...