Sunday, April 20, 2025

Latest Posts

திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்ற வவுனியா மாவட்ட மைந்தன்

திரிசாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்றுக் கொண்ட வவுனியாவைச் சேர்ந்த 2 ஆவது நபராகக் கணேசலிங்கம் யதுகணேஷ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 11 வருடங்களின் பின் இந்தச் சாதனையை அவர் செய்துள்ளார்.

இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தால் வழங்கப்படும் திரிசாரணர் பிரிவின் உயர் விருதான பேடன்பவல் விருதை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீடப் பட்டதாரியும், தற்போது யாழ்ப்பாணம்  பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகின்றவருமான கணேசலிங்கம்  யதுகணேஷ் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் வவுனியா மாவட்ட சாரணர் கிளையின் சமாதானத்தின் தூதுவரின் மாவட்ட இணைப்பாளர் ஆவார். அத்துடன், ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச ஜம்போரியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

வவுனியாவுக்கு முதலாவது பேடன்பவல் விருதானது 2013 ஆம் ஆண்டு சுந்தரலிங்கம் காண்டீபனுக்குக் கிடைத்தது. 11 வருடங்களுக்குப் பின்பு, இரண்டாவது பேடன்பவல் விருது 2024.12.16 அன்று கணேசலிங்கம் யதுகணேஷுக்குக் கிடைத்துள்ளது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.