Saturday, July 27, 2024

Latest Posts

யாழில் கார்த்திகை பூ செடியின்கிழங்கைச் சாப்பிட்டவர் மரணம்

கார்த்திகைக் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

உடுத்துறையைச் சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவர் சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார். அதையடுத்து அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.