வெள்ளை வேன் கடத்தல் குறித்து ராஜித்த கூறும் மெய்சிலிர்க்கும் கதை!

Date:

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களால் கடத்தப்பட்டு சடலங்கள் அகற்றப்பட்டு முதலைகளுக்கு உணவளிக்கப்பட்ட கதை உண்மை என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தமக்கு தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவராகப் பதவியேற்ற அதிகாரி ஒருவர் உண்மைகளை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இணையச் சேனல் ஒன்றுடன் உரையாடிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலரது தேவையற்ற பீதியால் நல்லாட்சி காலத்தில் நடத்தப்பட்ட குற்ற விசாரணைகள் தடைபட்டதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் குற்றப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதான அதிகாரியும் ஊழல் முறைமையில் செயற்பட்டமையினால் விசாரணைகள் தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விசாரணை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து குற்றவாளிகளை தண்டிக்க ஒரு அரசாங்கத்திற்கு ஐந்து வருடங்கள் மட்டும் போதாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...