வெள்ளை வேன் கடத்தல் குறித்து ராஜித்த கூறும் மெய்சிலிர்க்கும் கதை!

Date:

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களால் கடத்தப்பட்டு சடலங்கள் அகற்றப்பட்டு முதலைகளுக்கு உணவளிக்கப்பட்ட கதை உண்மை என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தமக்கு தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவராகப் பதவியேற்ற அதிகாரி ஒருவர் உண்மைகளை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இணையச் சேனல் ஒன்றுடன் உரையாடிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலரது தேவையற்ற பீதியால் நல்லாட்சி காலத்தில் நடத்தப்பட்ட குற்ற விசாரணைகள் தடைபட்டதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் குற்றப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதான அதிகாரியும் ஊழல் முறைமையில் செயற்பட்டமையினால் விசாரணைகள் தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விசாரணை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து குற்றவாளிகளை தண்டிக்க ஒரு அரசாங்கத்திற்கு ஐந்து வருடங்கள் மட்டும் போதாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...