வரலாற்றில் அதிக நிவாரணம் வழங்கிய அனுர அரசாங்கம்

Date:

நாட்டின் வரலாற்றில் பேரழிவு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு அதிகளவிலான நிவாரணங்களை வழங்கிய அரசு தற்போதைய அரசே என வர்த்தகம், வாணிபம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பயிர் சேதங்களுக்கு மட்டுமல்லாமல், உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள், வீடுகளை சுத்தம் செய்வதற்கும், வீடுகளில் இழந்த பாத்திரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மீண்டும் வாங்குவதற்கும் கூட நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிவாரணங்கள் எதிர்க்கட்சிக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால் தான், பேரழிவு நேரங்களில் விவசாயிகளுக்கு வரலாற்றிலேயே அதிக நிவாரணங்களை வழங்கியது இந்த அரசே” என அவர் தெரிவித்தார்.

கலா ஓயா வெள்ளப்பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் நடவடிக்கையின் போது, அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியை நேற்று (18) பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...